Tuesday, May 27, 2008

பள்ளிக்கு வந்தால் ரூ. 1 பரிசு

தேனி அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில், பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு தினசரி 1 ரூபாய் பரிசு அளிக்கும் புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பிள்ளைகள் பள்ளிக்கு வருவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த நூதனத் திட்டத்தை பள்ளி நிர்வாகம் அமல்படுத்தியுள்ளதாம்.தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நாளுகக்கு நாள் குறைந்து வருகிறது. பல அரசுப் பள்ளிகளில் நல்ல தரமான கல்வி வழங்கப்பட்டபோதிலும் கூட, பணத்தை சுரண்டும் தனியார் பள்ளிகள் மீதுதான் பெற்றோர்களுக்கு மோகம் அதிகமாக உள்ளது. எவ்வளவு கேட்டாலும் கண்ணை மூடிக் கொண்டு கொட்டிக் கொடுக்கவே பெற்றோர்கள் விரும்புகின்றனர்.தனியார் பள்ளிகளில் தங்களது பிள்ளைகள் படித்தால்தான் அது கெளரவம் என்ற தேவையில்லாத ஒரு கருத்தும் பெற்றோர்களிடம் உள்ளது.இந்த நிலையில் தேனி அருகே உள்ள போடி பிச்சாண்டிபட்டி அரசு நடுநிலைப் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு ரூபாய் வழங்க கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர் .இந்த திட்டம் இந்த ஆண்டு முதலே அமுலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதோடு பள்ளியில் சேரும் முதல் ஐம்பது மாணவர்களுக்கு இலவச சிலேட் , பை , சோப்பு முதலியவை கொடுக்க போகிறார்கள். எப்படியோ குழந்தைகள் படித்தால் சரிதான்.

No comments:

தற்சமயம் பார்ப்போர்