மும்பையில் தீவிரவாதிகள் மற்றும் போலீசாருக்கு இடையே இன்று காலையும் துப்பாக்கிச் சண்டை நீடிக்கும் நிலையில், அந்த பகுதிகளில் ஊரங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது.
இன்றும் குண்டுவெடிப்பு:
மும்பை டிரிடன்ட் ஓட்டலில் தீவிரவாதிகளுக்கும், போலீசாருக்கும் இடையே இன்று காலையும் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த ஓர் வெடிகுண்டு இன்று காலை வெடித்து சிதறியது. இதில் ஒட்டல் ஊழியர்கள் உள்பட 3 பேர் பலியாகியுள்ளனர்.
கொலாபாவில் துப்பாக்கி சண்டை:
மும்பை, கொலாபா பகுதியில் நாரிமன் ஹவுசில் ஏராளமான தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனர். அங்கு சுமார் 40 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். அவர்களை மீட்க ராணுவம் மற்றும் போலீசார் போராடி வருகின்றனர். இருதரப்புக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. பக்கத்து கட்டடத்தில் இருந்து வெளியே எட்டிப்பார்த்தவர்கள் மீதும் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். கட்டடத்தை சுற்றி ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
தாஜ் ஓட்டலில் சண்டை:
மும்பை தாஜ் ஓட்டல் உள்ளே சுமார் 15 வெளிநாட்டுப் பயணிகளை தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். அவர்களை மீட்க போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் போராடி வருகின்றனர். இதன் பலனாக ஓட்டலில் இருந்து பலர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அங்கு 4 தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனர். பிணைக்கைதிகளில் 3 எம்பிக்கள் இருப்பதாகவும் தெரிகிறது. இந்த பகுதிகளை சுற்றி ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை:
தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலியாக மத்திய அமைச்சரவை இன்று அவரசமாகமாக கூடி ஆலோசனை நடத்துகிறது. பாதுகாப்பு மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது.
பலி எண்ணிக்கை 101 ஆனது:
மும்பையில் நேற்றிரவு தொடங்கி இன்று காலை வரை குண்டுவெடிப்பு, துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டபடி உள்ளன. 10க்கும் அதிகமான இடங்களில் நடந்த இந்த தாக்குதலில் 7 உயரதிகாரிகள் உட்பட 12 போலீசார் பலியாகியுள்ளனர். 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இன்று காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 101 தாண்டியுள்ளது. காயம் அடைந்தோர் எண்ணிக்கை 300ஐ தாண்டியுள்ளது.
இந்த தாக்குதலின் போது, பல தீவிரவாதிகள் காரில் தப்பியோடிவிட்டனர். அவர்களை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி முனையில் போலீசார் 9 தீவிரவாதிகளை மடக்கிப் பிடித்ததுள்ளதாகவும் தெரிகிறது.
குண்டுகள் செயலிழப்பு :
இதற்கிடையே, கேட் வே ஆப் இந்தியா பகுதியில் போலீசார் மற்றும் ராணுவத்தினர் இணைந்து நடத்திய தீவிரச் சோதனையில் அந்த பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, செயலிழக்கவைக்கப்பட்டன.
கடல்மார்க்கமாக வந்த தீவிரவாதிகள்:
பலத்த பாதுகாப்பு மிகுந்த மும்பை நகரில், இந்த முறை கடல் வழி மார்க்கமாக தீவிரவாதிகள் நுழைந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக மும்பை துறைமுக பகுதியில் மர்மப்படகு உலவி வந்ததாகவும், அது தீவிரவாதிகள் படகாக இருக்கலாம் என்றும் தெரிகிறது.
சிவராஜ் பாட்டீல் விரைந்தார்:
இந்த தாக்குதலுக்கு பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து, பார்வையிட்ட மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், தீவிரவாதிகளின் தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், பிணைக்கைதிகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
தப்பிய கொரியா வர்த்தகர்கள்:
தாஜ் ஓட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, ஓட்டலின் மேல் மாடியில் கொரிய நாட்டு வர்த்தகர்களின் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. தீவிரவாதிகளின் தாக்குதல் ஒருபக்கம் நடந்துகொண்டிருந்த நிலையில், சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர்.
தேஷ்முக் கண்டனம்:
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்ததும், கேரள மாநிலத்தில் இருந்த மகாராஷ்டிரா முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் உடனடியாக மும்பை விரைந்தார். சம்பவங்களை கேட்டறிந்த அவர், 'தீவிரவாதிகளின் பிடியில் உள்ள தாஜ் ஓட்டல் மற்றும் டிரிடண்ட் ஓட்டலில் நிலைமை மோசமாக இருப்பதாகவும், நிலைமையைச் சமாளிக்க தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த 200 கமாண்டோக்கள் மும்பை வருவதாகவும்' அவர் கூறினார்.
பங்குச்சந்தை மூடல்:
தீவிரவாதிகள் தாக்குதல் காரணமாக மும்பை நகரமே ஸ்தம்பித்துள்ளது. சாலை, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மும்பை பங்குச் சந்தையும் இன்று மூடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு தீவிரம்:
மும்பை தாக்குதல்களைத் தொடர்ந்து டெல்லி, குஜராத், கோல்கத்தா மற்றும் பெங்களூர் உள்ளிட்ட நகரங்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளன. சென்னையிலும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Thursday, November 27, 2008
என்னதான்டா வேணும் உங்களுக்கு???
நண்பர்களே எல்லோருக்கும் ஒரு சோகமான வணக்கம்... என்னதான் நடக்குது இந்த நாட்டில? தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனா செயல்படுறான்? நெனச்சா குண்டு வைக்கிறான்? இதனால அவ்ங்களுக்கு என்னதான் வேணுமாம்? தலைவர்களும் கண்டனம் தெரிவிப்பதோட மறந்திடறாங்க....இதுக்கு என்னதாங்க முடிவு?
திருடனாபாத்து திருந்தாவிட்டா திருட்டை ஒழிக்க முடியாதுனு பழைய பாட்டு ஒன்னு இருக்குது.அதுமாதிரி குண்டு வைக்கிறவன் திருந்தணும்.இல்ல அவங்கள கட்டுப்படுத்த சட்ட்ங்களை இயற்றணும்.பொடா மதிரியான சட்டங்கள் வரணும்.ஆனா அத தவறா பயன்படுத்தமுடியாத அளவுக்கு கட்டுப்பாடுகள் கொண்டுவரணும்.
இந்த விசயத்துல காவல்துறையை குறை சொல்லறது எனக்கு சரியாபடுல.அவங்க அவங்களோட கடமைய செஞ்சுட்டுதான் இருக்குறாங்க. அதுவும் காவல்துறை உயரதிகாரிகள் 20க்கும் மேல இறந்திருக்கறாங்க.100க்கும் மேல பொதுமக்கள் இறந்தும் 250க்கும் மேல காயமடைந்தும் இருக்காங்க.
இந்த மாதிரி மறுபடியும் நடக்ககூடாதுனு கடவுள வேண்டறத தவிர எனக்கு வேற வழி தெரியல. இறைவா என் இந்திய மக்கள் என்றுதான் அமைதியாக வாழ அருள்புரிவாயோ!!!!!!!!!!
Wednesday, November 26, 2008
சமீபத்திய பொருளாதார பிரச்சினையை விளக்கும் கதை
வணக்கம் நண்பர்களே! ரொம்ப நாளைக்குப்பிறகு ப்லொக்குக்கு வந்திருக்கிறேன். இது தற்போதுள்ள பொருளாதார சூழலை விளக்கவல்ல சிறுகதை.
சரி கதையின் ஆரம்பம்
அது ஒரு சிறு தீவு நாடு.அதாவது அந்த நாட்டின் நிலப்பரப்பு அந்த தீவு மட்டுமே. அந்த தீவில் புழக்கத்தில் உள்ளது 2 ரூபாய் மட்டுமே.அதாவது 2 ஒரு ரூபாய் நாணயங்கள் மட்டுமே. அந்த நாட்டில் உள்ள 3 குடிமகன்களை A B C எனக்கொள்வோம்.A ஒரு ரூபாய் மதிப்புள்ள நிலத்தையும் B மற்றும் C இருவரும் ஆளுக்கு ஒரு ருபாய் நாணயங்களையும் கொண்டுள்ளனர்.
தற்போது B, Aயிடமிருந்து 1 ரூபாய்க்கு அந்த நிலத்தை வாங்குகிறார்.எனவே A மற்றும் C ஆளுக்கொரு ஒரு ரூபாய் நாணயங்களையும் B நிலத்தயும் கொன்டுள்ளனர்.அதாவது அந்த நாட்டின் மொத்த சொத்து 3 ரூபாய் = 2x1 ரூபாய்+1 ரூபாய் மதிப்புள்ள நிலம்.
அந்த நாட்டில் ஒரு சிறு நிலப்பரப்பே உள்ளதால் அதன் மதிப்பு பன்மடங்கு உயரும் என C நினைத்தார்.எனவே அவர் A யிடமிருந்து 1 ரூபாய் கடனாக பெற்று தன்னிடமுள்ள 1 ரூபாயையும் சேர்த்து நிலத்தை B யிடமிருந்து 2 ரூபாய்க்கு வாங்குகிறார். இப்போது
* A யிடம் C க்கு 1 ரூபாய் கடன் உள்ளது.
* B தன்னிடமிருந்த நிலத்தை 2 ரூபாய்க்கு விற்று 2 ரூபாய் வைத்துள்ளார்.
* C 2 ரூபாய் மதிப்புள்ள நிலத்தயும் Aவிடம் 1 ரூபாய் கடனும் வைத்துள்ளார்.எனவே அவரது மொத்த சொத்து மதிப்பு 1 ருபாய். எனவெ அன்னாட்டின் மொத்த சொத்து மதிப்பு இப்போது 4 ரூபாய் = Bன் 2 ரூபாய்+ C வைத்துள்ள 2 ரூபாய் மதிப்புள்ள நிலம். A தன்னிடமிருந்த நிலத்தின் மதிப்பு அதிகமானதை உணர்ந்து அதை திரும்ப கைப்பற்ற நினைத்தார். அதிர்ஷ்டவசமாக அவர் Cக்கு 1 ரூபாய் கடனளித்து இருந்தார்.எனவே B யிடம் இருந்து 2 ரூபாய் கடனாகப்பெற்று 3 ரூபாய்க்கு நிலத்தை C யிடமிருந்து வாங்கினார்.அதாவது Cன் கடனைத்தள்ளுபடி செய்து 2 ரூபாய்க்கு நிலத்தை மீட்டார்.
இப்போது A 3 ரூபாய் மதிப்புள்ள நிலத்தையும் B அளித்த 2 ரூபாய் கடனையும் கொண்டிருந்தார்.எனவே அவரது மொத்த சொத்து 1 ரூபாய்.
* B 2 ரூபாய் Aக்கு கடனளித்துள்ளார்.எனவே அவரது மொத்த சொத்துமதிப்பு 2 ருபாய்.
* C 2 ஒரு ரூபாய் நாணயங்களை வைத்துள்ளார். என்வே நாட்டின் மொத்த் மதிப்பு 5 ரூபாய்.
B அந்த நிலத்தை வாங்க நினைத்தார்.அவர் C யிடம் 2 ரூபாய் கடனாகப்பெற்றும் Aன் கடனைத்தள்ளுபடி செய்தும் நிலத்தை 4 ருபாய்க்கு வாங்கினார். இப்போது
* A தனது கடன் அடைக்கப்பெற்று 2 ஒரு ரூபாய் நாணயாங்களையும் கொண்டுள்ளார்.எனவே அவரது சொத்து மதிப்பு 2 ரூபாய்.
* B 4 ரூபாய் மதிப்புள்ள நிலத்தையும் C யிடம் 2 ரூபாய் கடனும் கொண்டுள்ளார்.எனவே அவரது சொத்து மதிப்பு 2 ரூபாய்.
* C 2 ரூபாய் Bக்கு கடனளித்துள்ளார்.என்வே அவரது சொத்து மதிப்பு 2 ரூபாய். எனவே நாட்டின் மொத்த மதிப்பு 6 ரூபாய். இப்போது Cன் மனதில் ஒரு எண்ணம் பிறக்கின்றது. நிலத்தின் மதிப்பு உயர்வது நின்றுவிட்டால் B எப்படி கடனைத்திருப்பியளிப்பார். நாட்டில் உள்ளது 2 ஒரு ரூபாய் நாணயங்கள் தானே.என்வே நிலமும் ஒரு ரூபாய் தான் மதிப்புள்ளது என்று எண்ணினார். இதே எண்ணம் Aக்கும் தோன்றியது.யாரும் நிலத்தை வாங்க முன்வரவில்லை. எனவே முடிவில்,
* A 2 ஒரு ரூபாய் நாணயங்களைக்கொண்டுள்ளார்.எனவே அவரது சொத்து மதிப்பு 2 ருபாய்.
* B 2 ரூபாய் கடனை Cயிடம் இருந்து பெட்ருள்ளார்.அவர் தனது நிலத்தின் மதிப்பு 4 ரூபாய் என எண்ணிக்கொண்டு இருந்தார்.ஆனால் நிலத்தை வாஙும் மற்ற இருவரும் அதை 1 ருபாய்கு மதிப்பதால் அதன் மதிப்பு 1 ருபாய்.எனவெ அவரது சொத்து மதிப்பு 1 ருபாய்.
* c 2 ருபாயை Bக்கு கடனளித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 2 ரூபாய். இப்பொது நாட்டின் சொத்து மதிப்பு 3 ரூபாய்...அதாவது Bன் நிலமதிப்பு சரிந்ததால் நாட்டின் சொத்து மதிப்பும் சரிந்தது.
B திவாலானதாக அறிவிப்பதை தவிர வேறு வழி இல்லை. எனவே C ஒரு ருபாய் மதிப்புள்ள நிலத்தை கைப்பற்றிக்கொள்கிறார்.B திவாலானதால் Cக்கு 2ரூபாய் கடனை திருப்பியளிக்க முடியவில்லை.எனவே Cக்கு 1 ரூபாய் நட்டம். முடிவில்,
* A வெற்றியாளர், B தோல்வியடைந்தவர், C நட்டமடைந்திருந்தலும் சிறிது அதிர்ஷ்டம் உள்ளவர். இதுதான் இப்போது உலக பொருளாதாரத்திலும் நடந்துள்ளது.இங்கு நிலத்திற்கு பதிலாக பங்குகள் விற்பனையில் எற்படும் மாற்றங்கள் மதிப்பை நிர்ணயிக்கின்றன.
Monday, June 9, 2008
அவள் மெல்லசிரித்தாள்.......
மறுநாள் கிறிஸ்துமஸ் இன்னும் மனைவிக்கு பரிசுப்பொருள் வாங்கவில்லை என்ற எண்ணம் எனக்குள்ளே வந்து மோதியது.வாங்குவதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை பணம் இல்லை என்பதைத் தவிர.
கிளாரா என் மனைவி செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தவள். என்னைப்போன்ற ஒரு சாமானியனை , அடுத்தவேளை உணவுக்கு வழி தெரியாமல் தவிப்பவனை காதலித்து மணமுடித்ததை தவிர வேறு பாவங்களை அறிந்திராதவள்.
அவளது அழகைப்பற்றி சொல்லவில்லை அல்லவா? தேவதையை பார்த்திருகிறீர்களா? உங்கள் பதில் ஆம் என்றால் நீங்கள் பார்த்து என்னவளை தான்.அவளது கூந்தல் அதன் அழகினை வார்த்தைகளால் கூற முடியாது.. அதுதான் தேவதை என்றுவிட்டயே என்கிறீர்களா? அதுவும் சரிதான்.
யாரோ ஒரு பிரபுவுக்குமனைவியாகி இருந்திருக்க வேண்டியவள் எனக்கே சொந்தமாகியதால் உடல் மெலிந்து அவள் படும் கஷ்டம் என்னால் தாளமுடியவில்லை. என்னால் தானே இவ்வளவும் .ஒரு இளவரசி ஒரு கூலி தொழிலாளியை காதலித்தால் பிறகு வேறு என்ன பலனை அனுபவிக்க இயலும்?
சரி இன்றைய நிகழ்வுக்கு வருவோம். நாளை கிறிஸ்துமஸ் அவளுக்கு என்ன பரிசு வாங்குவது? அவள் என்னிடம் எதுவும் கேட்டதில்லை. கேட்டலும் என்னால் வாங்கித்தர இயலுமா என்பது என் அன்றைய வருமானத்தை பொறுத்தது.
சரி அவளுக்கு வாங்குவதை பற்றி நான் பேசுவது சற்றே ஆச்சர்யம்தான் ஏனென்றால் என்னிடம் 10 சென்ட் கூட இல்லை.ஆனால் அவளுக்கு எதாவது வாங்கியாக வேண்டும். எவ்வாறு சிந்தித்துக்கொண்டே மணியை பார்த்தேன்.
கடிகாரம் 5 காட்டியது.பழைய கடிகாரம் என்றாலும் கடிகார சங்கிலி மட்டுமே அறுந்து போய்விட்டிருந்தது. எனவே கடிகாரதினைவிற்று எதாவது வாங்கலாம் என முடிவு செய்தேன். அது பழைய கடிகரமாக இருந்தாலும் ஐந்து டாலருக்கு போனது.
தெம்புடன் பரிசுப்பொருள் விற்கும் கடைக்கு நடந்தேன். அங்கு ஐந்து டாலருக்குள் உள்ள பொருளை தேடினேன். அப்போது ஒரு சீப்பு என் கண்ணில் பட்டது. அது யானை தந்தத்தாலனது . விலை எட்ட்டு டாலர் என்றான். ஒருமுறை என்னவள் பக்கத்து வீட்டுகாரியின் தந்தத்தாலான சீப்பினை ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டு இருந்தது என் கண் முன்னே வந்து சென்றது.அவள் என்னை திருமணம் செய்யாமல் அவள் வீட்டிலேயே இருந்தால் கூட மகிழ்ச்சியாக இருந்திருப்பாள் என்று தோன்றியது.
இனி அதைப்பேசி ஒன்றும் இல்லை.சரி என்னவளுக்கு அவள் ஆசைப்பட்டதை வங்கிதர எனக்கொரு தருணம் வாய்த்தது. இருப்பது ஐந்து டாலர்.வேண்டியது 3 டாலர்.என்ன செய்வது என பார்க்கையில் அந்த கூட்டம் என் கண்ணில் பட்டது. ஒருவன் பச்சை மிளகாய்கலை வைத்து சவால் விட்டுக்கொண்டிருந்தான்.
மிளகாய்கள் அத்தனையையும் தின்று தீர்ப்பவர்களுக்கு 3 டாலர் பரிசாக அறிவித்துக்கொண்டிருந்தான். என் கண்முன் பரிசைப்பார்த்து ஆன்ந்தப்படும் என் மனைவி மட்டுமே நின்றிருந்தாள். அவளுக்காக மிளகாய்களை தின்று 3 டாலர்களை வங்கிக்கொண்டு போய் அந்த சீப்பினை வாங்கியபோது மிளகாயின் காரம் நீங்கி என்னவளின் முத்தம்தான் என் நினைவில் நின்றது..
இதோ வீடு திரும்பிவிட்டேன் என்னவளைக்காண. இருவரும் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி முத்தம் இட்டுக்கொண்டோம்.அவளிடம் நான் என் பரிசுப்பொருளை நீட்டினேன்.அவள் முகத்தை நோக்கினேன் புன்சிரிப்பைக்காண.அவளோ எனக்கொரு பரிசு வாங்கி வைத்திருந்தாள்.அது எனது கடிகாரத்துக்கு ஒரு புதிய சங்கிலி.என் கையில் கடிகாரம் இல்லாதிருப்பதைக்கண்டு வினவினாள்.
காரணத்தைக் கூறினேன்.அவசர அவசரமாக பரிசுக்கவரைப் பிரித்துப்பார்த்துவிட்டு மெல்லசிரித்தாள்.அவள் சிரிப்பின் அர்த்தம் என்ன தெரியுமா?" நான் உனக்காக என் கூந்தலை விற்று கடிகாரச்சங்கிலி வங்கினேன்.நீயோ இல்லாத என் கூந்தலுக்கு உன் கடிகாரத்தையே விற்று தந்தச்சீப்பு வாங்கியுள்ளாய் ".......................................................................
கிளாரா என் மனைவி செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தவள். என்னைப்போன்ற ஒரு சாமானியனை , அடுத்தவேளை உணவுக்கு வழி தெரியாமல் தவிப்பவனை காதலித்து மணமுடித்ததை தவிர வேறு பாவங்களை அறிந்திராதவள்.
அவளது அழகைப்பற்றி சொல்லவில்லை அல்லவா? தேவதையை பார்த்திருகிறீர்களா? உங்கள் பதில் ஆம் என்றால் நீங்கள் பார்த்து என்னவளை தான்.அவளது கூந்தல் அதன் அழகினை வார்த்தைகளால் கூற முடியாது.. அதுதான் தேவதை என்றுவிட்டயே என்கிறீர்களா? அதுவும் சரிதான்.
யாரோ ஒரு பிரபுவுக்குமனைவியாகி இருந்திருக்க வேண்டியவள் எனக்கே சொந்தமாகியதால் உடல் மெலிந்து அவள் படும் கஷ்டம் என்னால் தாளமுடியவில்லை. என்னால் தானே இவ்வளவும் .ஒரு இளவரசி ஒரு கூலி தொழிலாளியை காதலித்தால் பிறகு வேறு என்ன பலனை அனுபவிக்க இயலும்?
சரி இன்றைய நிகழ்வுக்கு வருவோம். நாளை கிறிஸ்துமஸ் அவளுக்கு என்ன பரிசு வாங்குவது? அவள் என்னிடம் எதுவும் கேட்டதில்லை. கேட்டலும் என்னால் வாங்கித்தர இயலுமா என்பது என் அன்றைய வருமானத்தை பொறுத்தது.
சரி அவளுக்கு வாங்குவதை பற்றி நான் பேசுவது சற்றே ஆச்சர்யம்தான் ஏனென்றால் என்னிடம் 10 சென்ட் கூட இல்லை.ஆனால் அவளுக்கு எதாவது வாங்கியாக வேண்டும். எவ்வாறு சிந்தித்துக்கொண்டே மணியை பார்த்தேன்.
கடிகாரம் 5 காட்டியது.பழைய கடிகாரம் என்றாலும் கடிகார சங்கிலி மட்டுமே அறுந்து போய்விட்டிருந்தது. எனவே கடிகாரதினைவிற்று எதாவது வாங்கலாம் என முடிவு செய்தேன். அது பழைய கடிகரமாக இருந்தாலும் ஐந்து டாலருக்கு போனது.
தெம்புடன் பரிசுப்பொருள் விற்கும் கடைக்கு நடந்தேன். அங்கு ஐந்து டாலருக்குள் உள்ள பொருளை தேடினேன். அப்போது ஒரு சீப்பு என் கண்ணில் பட்டது. அது யானை தந்தத்தாலனது . விலை எட்ட்டு டாலர் என்றான். ஒருமுறை என்னவள் பக்கத்து வீட்டுகாரியின் தந்தத்தாலான சீப்பினை ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டு இருந்தது என் கண் முன்னே வந்து சென்றது.அவள் என்னை திருமணம் செய்யாமல் அவள் வீட்டிலேயே இருந்தால் கூட மகிழ்ச்சியாக இருந்திருப்பாள் என்று தோன்றியது.
இனி அதைப்பேசி ஒன்றும் இல்லை.சரி என்னவளுக்கு அவள் ஆசைப்பட்டதை வங்கிதர எனக்கொரு தருணம் வாய்த்தது. இருப்பது ஐந்து டாலர்.வேண்டியது 3 டாலர்.என்ன செய்வது என பார்க்கையில் அந்த கூட்டம் என் கண்ணில் பட்டது. ஒருவன் பச்சை மிளகாய்கலை வைத்து சவால் விட்டுக்கொண்டிருந்தான்.
மிளகாய்கள் அத்தனையையும் தின்று தீர்ப்பவர்களுக்கு 3 டாலர் பரிசாக அறிவித்துக்கொண்டிருந்தான். என் கண்முன் பரிசைப்பார்த்து ஆன்ந்தப்படும் என் மனைவி மட்டுமே நின்றிருந்தாள். அவளுக்காக மிளகாய்களை தின்று 3 டாலர்களை வங்கிக்கொண்டு போய் அந்த சீப்பினை வாங்கியபோது மிளகாயின் காரம் நீங்கி என்னவளின் முத்தம்தான் என் நினைவில் நின்றது..
இதோ வீடு திரும்பிவிட்டேன் என்னவளைக்காண. இருவரும் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி முத்தம் இட்டுக்கொண்டோம்.அவளிடம் நான் என் பரிசுப்பொருளை நீட்டினேன்.அவள் முகத்தை நோக்கினேன் புன்சிரிப்பைக்காண.அவளோ எனக்கொரு பரிசு வாங்கி வைத்திருந்தாள்.அது எனது கடிகாரத்துக்கு ஒரு புதிய சங்கிலி.என் கையில் கடிகாரம் இல்லாதிருப்பதைக்கண்டு வினவினாள்.
காரணத்தைக் கூறினேன்.அவசர அவசரமாக பரிசுக்கவரைப் பிரித்துப்பார்த்துவிட்டு மெல்லசிரித்தாள்.அவள் சிரிப்பின் அர்த்தம் என்ன தெரியுமா?" நான் உனக்காக என் கூந்தலை விற்று கடிகாரச்சங்கிலி வங்கினேன்.நீயோ இல்லாத என் கூந்தலுக்கு உன் கடிகாரத்தையே விற்று தந்தச்சீப்பு வாங்கியுள்ளாய் ".......................................................................
Friday, June 6, 2008
தசாவதாரத்தில் 10 வேடங்கள்
நம்பி என்ற வைணவர், பத்தடி உயர கலிஃபுல்லா, அமெரிக்க புஷ், பாடகர் அவதார் சிங், அமெரிக்க விஞ்ஞானியாக, ஜப்பானியராக, மூதாட்டி கிருஷ்ணா பாட்டி, ஆப்பிரிக்க நீக்ரோ, வழக்கமான ஹீரோ, கஸ்டம்ஸ் அதிகாரி பல்ராம் நாயுடு.
IT - கலாச்சார சீரழிவு
நண்பர்களே நான் பலமுறை இந்த மாதிரி உரையாடல்களை கேள்விப்பட்டதுண்டு. நானும் ஒரு மென்பொறியாளர் இந்த துறை சார்ந்தவன் என்ற முறையில் இதற்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்...
தகவல் தொழில்நுட்ப துறையினர் என்றால் ஏதோ அவர்கள் நமது கலாச்சாரத்தினை சீரழிப்பதற்கென்றே உள்ளவர்களபோல சில திரைப்படங்களும் சித்தரிக்கின்றன.ஏன் வேறு துறைகளில் உள்ளவர்கள் எல்லோரும் உத்தமர்களா ? யாரோ சிலர் அவ்வாறு இருப்பதைக்கொண்டு எல்லாரையும் அவ்வாறு எடைபோடுவது மிகவும் தவறானது. இந்த துறையினரைப்பற்றி இவ்வளவு குறைகளை கூறுபவர்கள் இதில் உள்ள மன உளைச்சல்களை பற்றி முழுமையாக அறிவார்களா? தினந்தோறும் நங்கள் சந்திக்கும் பிரச்சினைகளை அறிந்துகொண்டுதான் பேசுகிறீர்களா?
தகவல் தொழில்நுட்ப துறையினர் என்றால் ஏதோ அவர்கள் நமது கலாச்சாரத்தினை சீரழிப்பதற்கென்றே உள்ளவர்களபோல சில திரைப்படங்களும் சித்தரிக்கின்றன.ஏன் வேறு துறைகளில் உள்ளவர்கள் எல்லோரும் உத்தமர்களா ? யாரோ சிலர் அவ்வாறு இருப்பதைக்கொண்டு எல்லாரையும் அவ்வாறு எடைபோடுவது மிகவும் தவறானது. இந்த துறையினரைப்பற்றி இவ்வளவு குறைகளை கூறுபவர்கள் இதில் உள்ள மன உளைச்சல்களை பற்றி முழுமையாக அறிவார்களா? தினந்தோறும் நங்கள் சந்திக்கும் பிரச்சினைகளை அறிந்துகொண்டுதான் பேசுகிறீர்களா?
Tuesday, June 3, 2008
சும்மா ஜாலிக்கு!!!
ஒரு ஊருல ஒரு காக்காவும் ஒரு நரியும் இருந்துச்சாம். பக்கத்துல pizzahut ல pizza செஞ்சிட்டு இருந்தாங்களாம் ஒரு பாட்டி . உடனே இந்த காக்காவும் நரியும் plan பண்ணி அத திருட திட்டம் போட்டுசாம்.பாட்டி அந்த பக்கம் திரும்பின உடனே காக்கா pizza வ திருடிட்டு பறந்துபோய் ஒரு மரகிளையில உக்காந்துசாம். pizza அதோட வாயில கவ்விட்டு இருந்துச்சாம். உடனே நரி ஒரு plan பண்ணி காக்காகிட்ட இருந்து pizza வ அபகரிக்க திட்டம் போட்டுசாம். அதன் படி காக்கா கிட்ட போய் காக்கா காக்கா நீ ரொம்ப அழகா படுவாயமே எனக்காக ஒரு பாட்டு பாடுன்னு சொல்லிச்சாம். காக்கையும் pizza இருக்கிறத மறந்திட்டு கா கா னு கத்திசாம். pizza உடனே கீழே விழுந்ததும் நரி அவசர அவசரமா ஓடி அத எடுத்து தின்னுடுச்சாம். ஆனா pizza சேராம போய் டயரியா வந்து செத்து போச்சாம்
இதுல இருந்து என்ன தெரியுது????
..
..
..
..
..
..
..
..
..
எதுவா இருந்தாலும் மொதல்ல எதிரிக்கு குடுத்து டெஸ்ட் பண்ணதுக்கு அப்புறம் தான் சாபிடனும்...இது எப்பிடி இருக்குங்கோ....
இதுல இருந்து என்ன தெரியுது????
..
..
..
..
..
..
..
..
..
எதுவா இருந்தாலும் மொதல்ல எதிரிக்கு குடுத்து டெஸ்ட் பண்ணதுக்கு அப்புறம் தான் சாபிடனும்...இது எப்பிடி இருக்குங்கோ....
திவ்விய தரிசனம் !!!!
தூங்கற குழந்தைய தட்டி எழுப்பினது மாறி பெருங்குரலெடுத்து அலறியது டைம் பீஸ் .கண் திறந்து மணியைப் பார்த்தேன் . அடக்கடவுளே ! மணி ஏழைக்காட்டியது.
அய்யகோ திவ்விய தரிசனம் காண நேரமாகிவிட்டதே!!! என அரக்கபரக்க எழுந்து பல்துலக்கி குளித்துமுடிக்கையில் மணி ஏழு இருபது. அறைக்கு வெளியே சென்று அம்மாவை அவசரப்படுத்தி காலை உணவை முடித்து வெளியே கிளம்பினேன். மணியை பார்த்தால் மணி ஏழு நாற்பது. மனது பரபரவென அடித்துக்கொண்டு வேகமாக ஓடி வண்டியை கிளப்பினேன்.சும்மாவா திவ்விய தரிசனம் ஆயிற்றே . இரண்டு வருடங்களாக தொடர்ந்து கண்டுகொண்டு இருக்கிறேன். வண்டி தெருவைக்கடந்து சிக்னலில் நின்று பிசைக்கரனின் "அய்யாசாமி " ஆட்டோ டிரைவரின் "சாவு கிராக்கி " எல்லாம் தாண்டி இதோ வந்து விட்டேன் . என் திவ்யாவின் தரிசனத்துக்காக!!!!!!!
ஹிஹி ஹிசும்மா ஒரு ஜாலிக்கு ட்ரை பண்ணேன்... ஹொவ் இஸ் இட் ???
அய்யகோ திவ்விய தரிசனம் காண நேரமாகிவிட்டதே!!! என அரக்கபரக்க எழுந்து பல்துலக்கி குளித்துமுடிக்கையில் மணி ஏழு இருபது. அறைக்கு வெளியே சென்று அம்மாவை அவசரப்படுத்தி காலை உணவை முடித்து வெளியே கிளம்பினேன். மணியை பார்த்தால் மணி ஏழு நாற்பது. மனது பரபரவென அடித்துக்கொண்டு வேகமாக ஓடி வண்டியை கிளப்பினேன்.சும்மாவா திவ்விய தரிசனம் ஆயிற்றே . இரண்டு வருடங்களாக தொடர்ந்து கண்டுகொண்டு இருக்கிறேன். வண்டி தெருவைக்கடந்து சிக்னலில் நின்று பிசைக்கரனின் "அய்யாசாமி " ஆட்டோ டிரைவரின் "சாவு கிராக்கி " எல்லாம் தாண்டி இதோ வந்து விட்டேன் . என் திவ்யாவின் தரிசனத்துக்காக!!!!!!!
ஹிஹி ஹிசும்மா ஒரு ஜாலிக்கு ட்ரை பண்ணேன்... ஹொவ் இஸ் இட் ???
சிபிஎஸ்இ பாடமான ரஜினி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து, சிபிஎஸ்இ 6ம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தில் இடம்பெற்றுள்ளது.இந்த ஆண்டு ரஜினிக்கு சூப்பர் ஆண்டு. ஆண்டின் தொடக்கத்தில், என்டிடிவியின் சிறந்த பொழுதுபோக்காளர் விருதினை பிரதமர் மன்மோகன் சிங் கையால் பெற்றார்.அதன் பின்னர் சில மாதங்களுக்கு முன்பு மை நேம் இஸ் ரஜினிகாந்த் என்ற அவரது வாழக்கை வரலாற்று நூல் வெளியானது.இந்த நிலையில் இப்போது ரஜினிகாந்த்தின் வாழ்க்கை குறித்த ஒரு பகுதி, சிபிஎஸ்இ 6ம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தில் இடம் பெற்றுள்ளதாம்.இந்தியாவிலேயே ஒரு நடிகரின் வாழ்க்கை வரலாறு குறித்த பாடம், அதிலும் சிபிஎஸ்இ பாடப் புத்தகத்தில் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.டிக்னிட்டி ஆப் ஒர்க் என்ற தலைப்பின் கீழ் ரஜினி குறித்த பாடப் பகுதி இடம் பெற்றுள்ளது. ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி பிரஸ் இதை பிரசுரித்துள்ளது. பஸ் கண்டக்டராக இருந்து, சூப்பர் ஸ்டராக உயர்ந்தது வரையிலான ரஜினியின் வாழ்க்கை நிலையை இதில் சுருக்கமாக கூறியுள்ளனர்.70களில் பெங்களூரில், கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ரஜினி கண்டக்டராக பணியாற்றியபோது, அவருடன் டிரைவராகப் பணியாற்றிய, ரஜினியின் மிக நெருங்கிய நண்பரான பகதூர், ரஜினி குறித்து சொல்வது போல இந்தப் பாடம் அமைந்துள்ளது.பகதூர்தான் ரஜினியின் நடிப்பாற்றலை உணர்ந்து, அவரை சென்னை அடையாரில் உள்ள திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து படிக்குமாறு ஊக்குவித்தவர். அவர்தான் ரஜினியை கட்டாயப்படுத்தி சென்னைக்கு அனுப்பி வைத்தார். ரஜினி சென்னைக்கு வந்து 2 ஆண்டுகள் படித்தபோது, அவருக்கான செலவுகளையும் பகதூரே பார்த்துக் கொண்டார்.இன்னும் பகதூருடனான ரஜினியின் ஆழமான நட்பு, இருவரும் பிரியாமல் நட்போடு இருப்பதற்கான காரணம் உள்ளிட்டவையும் இதில் விளக்கப்பட்டுள்ளது.மொத்தம் 230 வார்த்தைகளில் இப்பாடம் அமைந்துள்ளது. பாடத்தின் இறுதியில், மாணவ, மாணவியருக்கு கேள்விகளும் கொடுக்கப்பட்டுள்ளன.கடின உழைப்பு பலன் தரும் என்பதை வலியுறுத்தும் வகையிலேயே ரஜினி குறித்த பாடம் வைக்கப்பட்டுள்ளதாக ஆக்ஸ்போர்ட் யுனிவர்ச்சி பிரஸ்ஸின் நிர்வாக இயக்குநர் மன்சர் கான் கூறியுள்ளார்.சாதாரண நிலையிலிருந்து மிகப் பெரிய சூப்பர் ஸ்டார் நிலைக்கு ரஜினி உயர்ந்திருப்பதை ஒவ்வொரு குழந்தையும் மனதில் கொண்டு, தாங்களும் அது போல உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தை அடைவர் என்கிறார்.
Tuesday, May 27, 2008
'டைட்டானிக் மிஷன்' என்ற பெயரில் டூப் விட்ட அமெரிக்கா!

டைட்டானிக் கப்பலைக் கண்டுபிடிக்கப் போவதாக கூறிக் கொண்டு, கடலில் மூழ்கி விட்ட தங்களது அணு சக்திக் கப்பலை அமெரிக்கா தேடிய விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.1912ம் ஆண்டு கடலில் மூழ்கிய கப்பல் டைட்டானிக். இதில் 1500 பேர் பலியானார்கள். டைட்டானிக் கப்பலைத் தேட அவ்வப்போது கடல் பயணங்கள் நடந்துள்ளன. ஆனால் டைட்டானிக் கப்பலைத் தேடுவதாக கூறி விட்டு, கடலில் மூழ்கி விட்ட தங்களது இரு கப்பல்களை அமெரிக்கா தேடிய கதை வெளியாகியுள்ளது.1985ல் இந்த டூப் மிஷனை மேற்கொண்டது அமெரிக்கா. பாப் பல்லார்ட் என்பவர்தான் இந்த மிஷனுக்குத் தலைமை தாங்கினார். சமீபத்தில் இவர் தான் மேற்கொண்ட டைட்டானிக் மிஷனின் பின்னணியை புட்டுப் புட்டு வைத்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், நாங்கள் அப்போது மேற்கொண்ட பயணம் டைட்டானிக் கப்பலைத் தேடுவதற்காக மேற்கொள்ளப்பட்டதல்ல. உண்மையில், கடலில் மூழ்கிப் போய் விட்ட 2ம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட இரு அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் குறித்த ஆய்வுக்காகவே அப்போது நாங்கள் கடல் பயணம் மேற்கொண்டோம்.இதை வெளியில் சொல்லக் கூடாது என்று அப்போது எனக்கு நெருக்கடி இருந்தது. இதனால்தான் அதைச் சொல்ல முடியவில்லை. இப்போது அந்த நெருக்கடி இல்லை. எனவே உண்மையை சொல்கிறேன்.தகவல் சேகரிக்க 12 நாள் அவகாசம் மட்டுமே தரப்பட்டது. அதற்குள் மூழ்கி விட்ட நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டுபிடித்து ஆய்வு செய்யுமாறு கூறப்பட்டிருந்தது. அது ஒரு ரகசியப் பயணம்.தகவல் சேகரிப்பது மட்டுமே எனக்குக் கொடுக்கப்பட்ட பணியாகும் என்றார் பல்லார்ட்.அமெரிக்கா தொலைத்த நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்றின் பெயர் யுஎஸ்ஸ் த்ரெஷர், இன்னொரு கப்பலின் பெயர் யுஎஸ்எஸ் ஸ்கார்பியோன். இரு கப்பல்களிலும் 200க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.இதில் 1963ம் ஆண்டு த்ரஷர் காணாமல் போனது. 68ல் ஸ்கார்பியோன் காணாமல் போனது.இந்தக் கப்பல்களில் ஒன்றை அப்போதைய சோவியத் யூனியன் படைகள் மூழ்கடித்திருக்கக் கூடும் என்பது அமெரிக்காவின் சந்தேகம்.இக்கப்பல்களைக் கண்டுபிடிக்கும் பணி பல்லார்டைத் தேடி வந்ததே சுவாரஸ்யமான விஷயம். கடலியல் ஆய்வாளரான பல்லார்ட், தனது ரோபோட் முறையிலான ஆய்வுக் கப்பலைப் பயன்படுத்தி டைட்டானிக் கப்பலை ஆய்வு செய்யத் தீர்மானித்தார்.இதற்கான அனுமதியை வாங்க கடற்படை அதிகாரிகளை சந்தித்தார். அப்போது அதை அப்புறம் பார்க்கலாம், முதலில் இந்த இரு கப்பல்களையும் தேடிக் கண்டுபிடித்து தகவல் கொண்டு வாருங்கள் என்று கடற்படை கேட்டுக் கொண்டதாம்.இதையடுத்து அமெரிக்க கடற்படைக்காக, டைட்டானிக் பயணம் என்ற பெயரில், நீர்மூழ்கிக் கப்பல்களைத் தேடும் பயணத்தை மேற்கொண்டது பல்லார்ட் தலைமையிலான குழு.பல்லார்ட் கடலுக்குள் சென்று காணாமல் போன இரு கப்பல்களின் சிதைவுகளையும் கண்டுபிடித்து அது தொடர்பான தகவல்களை அமெரிக்க கடற்படையிடம் வழங்கினார். இந்த ஆய்வின் முடிவில் ஸ்கார்பியோன் வேறு எந்த நாட்டுப் படையாலும் தாக்கப்படவில்லை என்று தெரிய வந்தது. அது அனுப்பிய குண்டு அதன் மீதே விழுந்ததால்தான் அது சேதமடைந்ததாகவும் தெரிய வந்தது.இந்தப் பயணத்தின்போது கிடைத்த கேப்பில் டைட்டானிக் ஆய்வையும் மேற்கொண்டாராம் பல்லார்ட்.
பள்ளிக்கு வந்தால் ரூ. 1 பரிசு
தேனி அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில், பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு தினசரி 1 ரூபாய் பரிசு அளிக்கும் புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பிள்ளைகள் பள்ளிக்கு வருவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த நூதனத் திட்டத்தை பள்ளி நிர்வாகம் அமல்படுத்தியுள்ளதாம்.தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நாளுகக்கு நாள் குறைந்து வருகிறது. பல அரசுப் பள்ளிகளில் நல்ல தரமான கல்வி வழங்கப்பட்டபோதிலும் கூட, பணத்தை சுரண்டும் தனியார் பள்ளிகள் மீதுதான் பெற்றோர்களுக்கு மோகம் அதிகமாக உள்ளது. எவ்வளவு கேட்டாலும் கண்ணை மூடிக் கொண்டு கொட்டிக் கொடுக்கவே பெற்றோர்கள் விரும்புகின்றனர்.தனியார் பள்ளிகளில் தங்களது பிள்ளைகள் படித்தால்தான் அது கெளரவம் என்ற தேவையில்லாத ஒரு கருத்தும் பெற்றோர்களிடம் உள்ளது.இந்த நிலையில் தேனி அருகே உள்ள போடி பிச்சாண்டிபட்டி அரசு நடுநிலைப் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு ரூபாய் வழங்க கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர் .இந்த திட்டம் இந்த ஆண்டு முதலே அமுலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதோடு பள்ளியில் சேரும் முதல் ஐம்பது மாணவர்களுக்கு இலவச சிலேட் , பை , சோப்பு முதலியவை கொடுக்க போகிறார்கள். எப்படியோ குழந்தைகள் படித்தால் சரிதான்.
கார்த்தியின் 'மக்கள் நல மன்றம்'

நடிகர் கார்த்தி சமூக சேவையை குறிக்கோளாகக் கொண்டு, மக்கள் நல மன்றம் என்ற பெயரில் புதிய அமைப்பு ஒன்றைத் தொடங்கியுள்ளார்.நடிகர் சிவக்குமாரின் இளைய மகன் கார்த்தி, சூர்யாவின் தம்பி. இவர் பருத்தி வீரன் மூலம் ஹீரோவானவர். தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இந் நிலையில், நேற்று தனது பிறந்த நாளை கார்த்தி ரசிகர்களுடன் கொண்டாடினார். பிறந்த நாள் விழா தி.நகர் பிட்டி. தியாகராயர் அரங்கில் நடந்தது.இதில் சென்னையைச் சேர்ந்த ரசிகர் மன்றங்கள் சார்பாக ஊனமுற்றோருக்கு சைக்கிள்கள், தையல் இயந்திரங்கள், மாணவ, மாணவியருக்கு பாடப் புத்தகங்கள், பேனா உள்ளிட்டவற்றை கார்த்தி வழங்கினார்.இதையடுத்து மக்கள் நல மன்றம் என்கிற சமூக சேவை அமைப்பு தொடங்கப்படுவதாகவும் அறிவித்தார்.நிகழ்ச்சியில் கார்த்தி பேசுகையில், எங்களை வாழ வைக்கும் ரசிகர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியதன் விளைவுதான் இந்த மக்கள் நல மன்றம். ஏற்கனவே சிவகுமார் அறக்கட்டளை மூலமாக என்னுடைய தந்தையும், அகரம் பவுண்டேஷன் சார்பில் சூர்யாவும் மாணவர்களின் கல்விக்காக பல நல்ல காரியங்களை செய்து வருகிறார்கள்.என் பங்குக்கு நானும் ஏதாவது செய்ய விரும்பினேன். அதற்கான முதல் படிதான் இந்த விழா.ரசிகர் மன்றம் என்றால் உருப்படாதவர்கள் என்ற பெயரை மாற்றி, சமூக அக்கறையுடையவர்களாகவும், மக்களுக்கு சேவை செய்பவர்களாகவும் உருவாக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில்தான் மக்கள் நல மன்றம் என்று பெயரிட்டிருக்கிறோம்.இந்த அமைப்பின் மூலம் நிறைய நல்ல விஷயங்களை செய்வோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் கார்த்தி.மன்றத்தின் அகில இந்திய கெளரவத் தலைவராக ஞானவேல், தலைவராக பரமு, செயலாளராக வீரமணி ஆகியோர் செயல்படவுள்ளனர்.இந்த விழாவுக்கு முன்னதாக, திருவான்மியூரில் கார்த்தி ரத்ததானம் செய்தார். மேலும், அடையார் ஒய்.ஆர்.ஜி.கேர் மருத்துவ மையத்திற்கு சென்று எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சிகிச்சைக்காக ரூ.50 ஆயிரம் காசோலையையைம் வழங்கினார்.
வாழ்க நடிகரின் சமூக சேவை.....
உங்கள்.....
இன்ஷ்ட்ருகிங் .
Monday, May 19, 2008
கையெழுத்து தெளிவா இருக்கணும்!!!!
டெல்லி உயர்நீதிமன்றத்தில் டெட்ரிஸ் இன்போடெக் லிட் என்ற நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அதில் மெட்ரோபாலிடன் மேஜிஸ்திரேட் நீதிமன்றம், தங்களுக்கு ஜாமினில் வெளிவர முடியாத வாரன்ட்டை பிறப்பித்துள்ளது. அது எதிரானது, அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தனர்.இந்த மனுவை நீதிபதி விபின் சங்கி விசாரித்தார். அப்போது, கீழ் நீதிமன்ற தீர்ப்பு அறிக்கையை நீதிபதி படித்து பார்த்தார். ஆனால் தீர்ப்பை படிக்க முடியாமல் திணறினார் நீதிபதி. காரணம் அந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதியின் கையெழுத்து அவருக்குப் புரியவில்லை.இதனால் டென்ஷனான நீதிபதி பவிபின் சங்கி, மெட்ரோபாலிடன் மேஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு படிப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. புரியும் வகையில் தீர்ப்பை எழுத வேண்டும். அவர் மட்டும் படித்தற்கல்ல தீர்ப்பு. அதை யார், எப்போது படித்தாலும் புரிய வேண்டும். புரியும்படி எழுத அவர் பழக வேண்டும் என்று அறிவுரை கூறினார்.
Saturday, May 17, 2008
இந்தியாவில் போலி மருந்து !!!
இந்தியாவில் விற்பனை செய்யும் மருந்து வகைகளில் சுமார் 20 விழுக்காடு
போலி மருந்துகளே என அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மருந்துகள் நோயை தீர்ப்பதற்கு பதிலாக புது நோய்களை உருவாக்கியும் விடும் அபாயம் உள்ளது. மரணத்துக்கு வழிகோலும் இந்த போலி மருந்து விற்பனை ஆண்டுக்கு 25 சதவீதம் வளர்ந்து வருகிறது. உலக அளவில் விற்பனையாகும் போலி மருந்துகளில் 75 சதவீதம் இந்தியாவில் இருந்துதான் சப்ளை ஆகிறது என்று பொருளாதார கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றொரு அதிர்ச்சி தகவலை அளித்துள்ளது. இந்த தகவல்கள் இந்திய மருந்து கட்டுப்பாட்டுத் துறையை உசுப்பேற்றியுள்ளது. உயிர்குடிக்கும் போலி மருந்து மார்கெட் குறித்த கண்காணிப்பில் அதிகாரிகள் அதிரடியாக களமிறங்க திட்டமிட்டுள்ளனர்.இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமை அதிகாரி சுரேந்தர் சிங் தலைமையில் போலி மருந்து மார்க்கெட் வேட்டை மேற்கொள்ளப்படுகிறது. 6 மாத கால அவகாசத்தில் இந்த சோதனை நடத்தி முடிக்கப்படும். மருந்து ஆய்வாளர்களே நோயாளிகளாக சென்று 31,000 மருந்துகளை சாம்பிள்களாக பெற்று பரிசோதனைக்கூடங்களில் ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது...
ஏதோ நல்லது நடந்தா சரி....
போலி மருந்துகளே என அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மருந்துகள் நோயை தீர்ப்பதற்கு பதிலாக புது நோய்களை உருவாக்கியும் விடும் அபாயம் உள்ளது. மரணத்துக்கு வழிகோலும் இந்த போலி மருந்து விற்பனை ஆண்டுக்கு 25 சதவீதம் வளர்ந்து வருகிறது. உலக அளவில் விற்பனையாகும் போலி மருந்துகளில் 75 சதவீதம் இந்தியாவில் இருந்துதான் சப்ளை ஆகிறது என்று பொருளாதார கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றொரு அதிர்ச்சி தகவலை அளித்துள்ளது. இந்த தகவல்கள் இந்திய மருந்து கட்டுப்பாட்டுத் துறையை உசுப்பேற்றியுள்ளது. உயிர்குடிக்கும் போலி மருந்து மார்கெட் குறித்த கண்காணிப்பில் அதிகாரிகள் அதிரடியாக களமிறங்க திட்டமிட்டுள்ளனர்.இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமை அதிகாரி சுரேந்தர் சிங் தலைமையில் போலி மருந்து மார்க்கெட் வேட்டை மேற்கொள்ளப்படுகிறது. 6 மாத கால அவகாசத்தில் இந்த சோதனை நடத்தி முடிக்கப்படும். மருந்து ஆய்வாளர்களே நோயாளிகளாக சென்று 31,000 மருந்துகளை சாம்பிள்களாக பெற்று பரிசோதனைக்கூடங்களில் ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது...
ஏதோ நல்லது நடந்தா சரி....
சுல்தான் தி வார்ரியர்!!!!

முதல் முறையாக தமிழ் படம் ஒன்று உலக அளவிலான சந்தைக்கு போகிறது. அந்த பெருமையைக் கொடுத்திருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினி அனிமேஷனில் நடிக்கும் சுல்தான் தி வேரியர். ரஜினி நடித்து வெளியான படங்கள் தமிழகத்திலும் உள்நாட்டிலும் அதிக நாட்கள் ஓடுவது சாதாரண விஷயம். ஆனால் ஜப்பானில் 400 நாட்கள் வரை ஓடி சக்கைப் போடு போட்டது முத்து. அதைத் தொடர்ந்து உலகளவில் ரஜினியின் படத்துக்கு தனி மவுசு ஏற்பட்டது.சமீபத்தில் 80 கோடி பட்ஜெட்டில் ரஜினி நடித்து வெளியான சிவாஜி படம் உலகளவில் ரெகார்ட் பிரேக் செய்தது. இது தமிழ் சினிமாவுக்கான வர்த்தகத்தையும் தலைநிமிர வைத்தது. தற்போது தமிழிலும் தெலுங்கிலும் வெளியாக தயாராகி கொண்டிருக்கும் குசேலன் படத்தின் உள்நாட்டு உரிமையை சாய்மீரா நிறுவனம் ரூ.64 கோடிக்கு வாங்கியுள்ளது. வெளிநாட்டு உரிமையை ரூ.40 கோடி கொடுத்து ஐங்கரன் வாங்கியுள்ளது.உலக மார்க்கெட்டில் எகிறும் ரஜினியின் படங்களின் அடுத்த வரிசையில் இருப்பது சுல்தான் தி வேரியர். அனிமேஷனில் ரஜினி கலக்கும் இந்த படம் ரஜினி மகள் சவுந்தர்யாவின் ஆக்கர் ஸ்டூடியோஸ், அனில் அம்பானியின் அட்லாப்ஸ் மற்றும் வார்னர் பிரதர்ஸ் ஆகியவையின் கூட்டு தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கிறது.இந்தியாவில் மிக அதிகமாக 70 கோடி பட்ஜெட்டில் இந்த அனிமேட்டட் படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. ரூ.250 கோடி வரை லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1700-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.70 லட்சத்தில் உருவாக இருந்த இந்த படம், சிவாஜியின் சூப்பர் டூப்பர் ஹிட்டினால் 70 கோடி பட்ஜெட்டுக்கு உயர்ந்துள்ளது. ரஜினியின் எல்லா வயது ரசிகர்களும் ஆதிக ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் படமாக உள்ளது சுல்தான் தி வேரியர்.சுல்தானை தொடர்ந்து வார்னர் பிரதர்சுடன் இணைந்து ஆக்கர் ஸ்டூடியோஸ், பில்லாவின் அடுத்த பார்ட்டை தயாரிக்க உள்ளது. அதில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிக்கிறார்.
Monday, May 12, 2008
என்ன கொடுமை சார் இது ?
அமெரிக்கா அதிபரின் தற்போதைய ஆய்வறிக்கையை அனைவரும் அறிந்திருப்பீர்கள் . அதாவது உலகளாவிய உணவுப்பொருள் விலையேற்றத்துக்கு காரணம் இந்தியர்களும் சீனர்களும் நல்ல சத்தான உணவு வகைகளை உண்பதே காரணமாம். ஒரு நாட்டு மக்கள் சத்தான உணவை சாப்பிடுவது அவர்களின் வாழ்க்கை தர முன்னேற்றத்தை காட்டுகிறது.அதில் அமெரிக்காவிற்கு என்ன வருத்தம் என புரியவில்லை.போதாதென்று கச்சாஎண்ணெய் விலையேற்றத்துக்கும் இந்தியர்கள் தான் காரணம் என்று மேலும் குற்றம் சாட்டியுள்ளது... என்ன கொடுமை சார் இது......
Friday, May 9, 2008
ஆச்சர்யமான உண்மை !!!
வணக்கம் என்னுடைய முதல் ப்லோகிற்கு வந்ததற்கு நன்றி. சரி மேடேற சொல்லுடானு நீங்க திட்றது காதுல விழுது... சொல்றேன்.
நான் திருவனந்தபுரத்துல சாப்ட்வேர் கம்பெனில வொர்க் பண்ணிற்றுகேன். வழக்கமா ஒரு ஹோடேல லஞ்ச் சாப்பிட போவேன். நேற்று அப்படி போகும் போது ஹோடேல வொர்க் பண்ற அண்ணன் ஒருத்தர பார்த்து ஸ்மைல் பண்ணினார். அவரு யாருன்னு பார்த்தேன்.அவர் ரொம்ப சிம்ப்ளா இருந்தார்.
நான் அந்த அண்ணன் கிட்ட யாரு அவருன்னு கேட்டப்ப அவரு சொன்னாரு அவரு தான் திருவனந்தபுரம் எம்.பி. னு. எனக்கு ஒரே ஷாக். என்னடா ஒரு எம்.பி எந்த பந்தாவும் இல்லாம கார் இல்லாம ரொம்ப சிம்ப்ளா சாதரண ஹோடேல்கு வந்திருகாறேனு. இந்த சந்தேகத்த அந்த அண்ணன் கிட்டயே கேட்டேன். அவரு சொன்னாரு இவரு என்ன கேரள டீரன்ச்போர்ட் மிநிச்டரே இங்க நடந்து வந்து தான் சாப்பிடுவாருனு. அந்த ஹோட்டல் கேரள சட்டமன்றத்துக்கு கொஞ்சம் தள்ளி இருந்தது. எனக்கு ஆச்சர்யம் தாங்கல. பக்கத்து வீட்டு பங்க்சனுகே ௧0 கார்ல போற நம்ம மிநிச்டேர்ஸ் எங்க இங்க நடந்து போற மிநிச்டேர்ஸ் எங்க?????
கேரளா உண்மைலையே டாப் தான்....
நான் திருவனந்தபுரத்துல சாப்ட்வேர் கம்பெனில வொர்க் பண்ணிற்றுகேன். வழக்கமா ஒரு ஹோடேல லஞ்ச் சாப்பிட போவேன். நேற்று அப்படி போகும் போது ஹோடேல வொர்க் பண்ற அண்ணன் ஒருத்தர பார்த்து ஸ்மைல் பண்ணினார். அவரு யாருன்னு பார்த்தேன்.அவர் ரொம்ப சிம்ப்ளா இருந்தார்.
நான் அந்த அண்ணன் கிட்ட யாரு அவருன்னு கேட்டப்ப அவரு சொன்னாரு அவரு தான் திருவனந்தபுரம் எம்.பி. னு. எனக்கு ஒரே ஷாக். என்னடா ஒரு எம்.பி எந்த பந்தாவும் இல்லாம கார் இல்லாம ரொம்ப சிம்ப்ளா சாதரண ஹோடேல்கு வந்திருகாறேனு. இந்த சந்தேகத்த அந்த அண்ணன் கிட்டயே கேட்டேன். அவரு சொன்னாரு இவரு என்ன கேரள டீரன்ச்போர்ட் மிநிச்டரே இங்க நடந்து வந்து தான் சாப்பிடுவாருனு. அந்த ஹோட்டல் கேரள சட்டமன்றத்துக்கு கொஞ்சம் தள்ளி இருந்தது. எனக்கு ஆச்சர்யம் தாங்கல. பக்கத்து வீட்டு பங்க்சனுகே ௧0 கார்ல போற நம்ம மிநிச்டேர்ஸ் எங்க இங்க நடந்து போற மிநிச்டேர்ஸ் எங்க?????
கேரளா உண்மைலையே டாப் தான்....
ஆரம்பம்....
சரி இன்னிக்கு ப்ளோக் ஸ்டார்ட் பண்ணியாச்சு... ரெண்டு போஸ்டும் பண்ணியாச்சு... நாளைக்கு கண்டிப்பா உபயோகமான மட்டேர்ஸ் சொல்றேன்..
என் எண்ணங்கள்!!!
எதோ ஒரு ப்ளோக் ஆரம்பிச்சு வைப்போம்னு இத ஆரம்பிச்சேன் ஆறு மாசத்துக்கு முன்னாடி. இப்போதான் இதுக்கு ஒரு விடிவு காலம். இனிமே டெய்லி வந்து இம்சை பண்ணுவேன்.... தயாரா இருங்க...
என்ன ரெடி யா?
என்ன ரெடி யா?
முதல் பயணம்!!!
வணக்கம் !!!
இது என்னுடைய முதல் பதிவு. பயணம் என இதற்கு தலைப்பு கொடுத்துள்ளேன். பயணம் சிறக்க உங்கள் அன்பும் வழிகாட்டுதலும் தேவை.
இது என்னுடைய முதல் பதிவு. பயணம் என இதற்கு தலைப்பு கொடுத்துள்ளேன். பயணம் சிறக்க உங்கள் அன்பும் வழிகாட்டுதலும் தேவை.
Subscribe to:
Comments (Atom)