Thursday, November 27, 2008

மும்பை குண்டு வெடிப்பு

மும்பையில் தீவிரவாதிகள் மற்றும் போலீசாருக்கு இடையே இன்று காலையும் துப்பாக்கிச் சண்டை நீடிக்கும் நிலையில், அந்த பகுதிகளில் ஊரங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது.

இன்றும் குண்டுவெடிப்பு:

மும்பை டிரிடன்ட் ஓட்டலில் தீவிரவாதிகளுக்கும், போலீசாருக்கும் இடையே இன்று காலையும் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த ஓர் வெடிகுண்டு இன்று காலை வெடித்து சிதறியது. இதில் ஒட்டல் ஊழியர்கள் உள்பட 3 பேர் பலியாகியுள்ளனர்.

கொலாபாவில் துப்பாக்கி சண்டை:

மும்பை, கொலாபா பகுதியில் நாரிமன் ஹவுசில் ஏராளமான தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனர். அங்கு சுமார் 40 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். அவர்களை மீட்க ராணுவம் மற்றும் போலீசார் போராடி வருகின்றனர். இருதரப்புக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. பக்கத்து கட்டடத்தில் இருந்து வெளியே எட்டிப்பார்த்தவர்கள் மீதும் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். கட்டடத்தை சுற்றி ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

தாஜ் ஓட்டலில் சண்டை:

மும்பை தாஜ் ஓட்டல் உள்ளே சுமார் 15 வெளிநாட்டுப் பயணிகளை தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். அவர்களை மீட்க போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் போராடி வருகின்றனர். இதன் பலனாக ஓட்டலில் இருந்து பலர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அங்கு 4 தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனர். பிணைக்கைதிகளில் 3 எம்பிக்கள் இருப்பதாகவும் தெரிகிறது. இந்த பகுதிகளை சுற்றி ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை:

தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலியாக மத்திய அமைச்சரவை இன்று அவரசமாகமாக கூடி ஆலோசனை நடத்துகிறது. பாதுகாப்பு மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது.

பலி எண்ணிக்கை 101 ஆனது:

மும்பையில் நேற்றிரவு தொடங்கி இன்று காலை வரை குண்டுவெடிப்பு, துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டபடி உள்ளன. 10க்கும் அதிகமான இடங்களில் நடந்த இந்த தாக்குதலில் 7 உயரதிகாரிகள் உட்பட 12 போலீசார் பலியாகியுள்ளனர். 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இன்று காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 101 தாண்டியுள்ளது. காயம் அடைந்தோர் எண்ணிக்கை 300ஐ தாண்டியுள்ளது.

இந்த தாக்குதலின் போது, பல தீவிரவாதிகள் காரில் தப்பியோடிவிட்டனர். அவர்களை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி முனையில் போலீசார் 9 தீவிரவாதிகளை மடக்கிப் பிடித்ததுள்ளதாகவும் தெரிகிறது.

குண்டுகள் செயலிழப்பு :

இதற்கிடையே, கேட் வே ஆப் இந்தியா பகுதியில் போலீசார் மற்றும் ராணுவத்தினர் இணைந்து நடத்திய தீவிரச் சோதனையில் அந்த பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, செயலிழக்கவைக்கப்பட்டன.

கடல்மார்க்கமாக வந்த தீவிரவாதிகள்:

பலத்த பாதுகாப்பு மிகுந்த மும்பை நகரில், இந்த முறை கடல் வழி மார்க்கமாக தீவிரவாதிகள் நுழைந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக மும்பை துறைமுக பகுதியில் மர்மப்படகு உலவி வந்ததாகவும், அது தீவிரவாதிகள் படகாக இருக்கலாம் என்றும் தெரிகிறது.

சிவராஜ் பாட்டீல் விரைந்தார்:

இந்த தாக்குதலுக்கு பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து, பார்வையிட்ட மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், தீவிரவாதிகளின் தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், பிணைக்கைதிகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

தப்பிய கொரியா வர்த்தகர்கள்:

தாஜ் ஓட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, ஓட்டலின் மேல் மாடியில் கொரிய நாட்டு வர்த்தகர்களின் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. தீவிரவாதிகளின் தாக்குதல் ஒருபக்கம் நடந்துகொண்டிருந்த நிலையில், சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர்.

தேஷ்முக் கண்டனம்:

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்ததும், கேரள மாநிலத்தில் இருந்த மகாராஷ்டிரா முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் உடனடியாக மும்பை விரைந்தார். சம்பவங்களை கேட்டறிந்த அவர், 'தீவிரவாதிகளின் பிடியில் உள்ள தாஜ் ஓட்டல் மற்றும் டிரிடண்ட் ஓட்டலில் நிலைமை மோசமாக இருப்பதாகவும், நிலைமையைச் சமாளிக்க தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த 200 கமாண்டோக்கள் மும்பை வருவதாகவும்' அவர் கூறினார்.

பங்குச்சந்தை மூடல்:

தீவிரவாதிகள் தாக்குதல் காரணமாக மும்பை நகரமே ஸ்தம்பித்துள்ளது. சாலை, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மும்பை பங்குச் சந்தையும் இன்று மூடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு தீவிரம்:

மும்பை தாக்குதல்களைத் தொடர்ந்து டெல்லி, குஜராத், கோல்கத்தா மற்றும் பெங்களூர் உள்ளிட்ட நகரங்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளன. சென்னையிலும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

என்னதான்டா வேணும் உங்களுக்கு???

நண்பர்களே எல்லோருக்கும் ஒரு சோகமான வணக்கம்... என்னதான் நடக்குது இந்த நாட்டில? தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனா செயல்படுறான்? நெனச்சா குண்டு வைக்கிறான்? இதனால அவ்ங்களுக்கு என்னதான் வேணுமாம்? தலைவர்களும் கண்டனம் தெரிவிப்பதோட மறந்திடறாங்க....இதுக்கு என்னதாங்க முடிவு?  
 

திருடனாபாத்து திருந்தாவிட்டா திருட்டை ஒழிக்க முடியாதுனு பழைய பாட்டு ஒன்னு இருக்குது.அதுமாதிரி குண்டு வைக்கிறவன் திருந்தணும்.இல்ல அவங்கள கட்டுப்படுத்த சட்ட்ங்களை இயற்றணும்.பொடா மதிரியான சட்டங்கள் வரணும்.ஆனா அத தவறா பயன்படுத்தமுடியாத அளவுக்கு கட்டுப்பாடுகள் கொண்டுவரணும்.  

 
இந்த விசயத்துல காவல்துறையை குறை சொல்லறது எனக்கு சரியாபடுல.அவங்க அவங்களோட கடமைய செஞ்சுட்டுதான் இருக்குறாங்க. அதுவும் காவல்துறை உயரதிகாரிகள் 20க்கும் மேல இறந்திருக்கறாங்க.100க்கும் மேல பொதுமக்கள் இறந்தும் 250க்கும் மேல காயமடைந்தும் இருக்காங்க.  


இந்த மாதிரி மறுபடியும் நடக்ககூடாதுனு கடவுள வேண்டறத தவிர எனக்கு வேற வழி தெரியல. இறைவா என் இந்திய மக்கள் என்றுதான் அமைதியாக வாழ அருள்புரிவாயோ!!!!!!!!!!

Wednesday, November 26, 2008

சமீபத்திய பொருளாதார பிரச்சினையை விளக்கும் கதை

வணக்கம் நண்பர்களே! ரொம்ப நாளைக்குப்பிறகு ப்லொக்குக்கு வந்திருக்கிறேன். இது தற்போதுள்ள பொருளாதார சூழலை விளக்கவல்ல சிறுகதை. 
சரி கதையின் ஆரம்பம்
அது ஒரு சிறு தீவு நாடு.அதாவது அந்த நாட்டின் நிலப்பரப்பு அந்த தீவு மட்டுமே. அந்த தீவில் புழக்கத்தில் உள்ளது 2 ரூபாய் மட்டுமே.அதாவது 2 ஒரு ரூபாய் நாணயங்கள் மட்டுமே. அந்த நாட்டில் உள்ள 3 குடிமகன்களை A B C எனக்கொள்வோம்.A ஒரு ரூபாய் மதிப்புள்ள நிலத்தையும் B மற்றும் C இருவரும் ஆளுக்கு ஒரு ருபாய் நாணயங்களையும் கொண்டுள்ளனர்.  
தற்போது B, Aயிடமிருந்து 1 ரூபாய்க்கு அந்த நிலத்தை வாங்குகிறார்.எனவே A மற்றும் C ஆளுக்கொரு ஒரு ரூபாய் நாணயங்களையும் B நிலத்தயும் கொன்டுள்ளனர்.அதாவது அந்த நாட்டின் மொத்த சொத்து 3 ரூபாய் = 2x1 ரூபாய்+1 ரூபாய் மதிப்புள்ள நிலம்.
அந்த நாட்டில் ஒரு சிறு நிலப்பரப்பே உள்ளதால் அதன் மதிப்பு பன்மடங்கு உயரும் என C நினைத்தார்.எனவே அவர் A யிடமிருந்து 1 ரூபாய் கடனாக பெற்று தன்னிடமுள்ள 1 ரூபாயையும் சேர்த்து நிலத்தை B யிடமிருந்து 2 ரூபாய்க்கு வாங்குகிறார். இப்போது 
* A யிடம் C க்கு 1 ரூபாய் கடன் உள்ளது.  
* B தன்னிடமிருந்த நிலத்தை 2 ரூபாய்க்கு விற்று 2 ரூபாய் வைத்துள்ளார்.
* C 2 ரூபாய் மதிப்புள்ள நிலத்தயும் Aவிடம் 1 ரூபாய் கடனும் வைத்துள்ளார்.எனவே அவரது மொத்த சொத்து மதிப்பு 1 ருபாய். எனவெ அன்னாட்டின் மொத்த சொத்து மதிப்பு இப்போது 4 ரூபாய் = Bன் 2 ரூபாய்+ C வைத்துள்ள 2 ரூபாய் மதிப்புள்ள நிலம்.   A தன்னிடமிருந்த நிலத்தின் மதிப்பு அதிகமானதை உணர்ந்து அதை திரும்ப கைப்பற்ற நினைத்தார். அதிர்ஷ்டவசமாக அவர் Cக்கு 1 ரூபாய் கடனளித்து இருந்தார்.எனவே B யிடம் இருந்து 2 ரூபாய் கடனாகப்பெற்று 3 ரூபாய்க்கு நிலத்தை C யிடமிருந்து வாங்கினார்.அதாவது Cன் கடனைத்தள்ளுபடி செய்து 2 ரூபாய்க்கு நிலத்தை மீட்டார்.  
இப்போது A 3 ரூபாய் மதிப்புள்ள நிலத்தையும் B அளித்த 2 ரூபாய் கடனையும் கொண்டிருந்தார்.எனவே அவரது மொத்த சொத்து 1 ரூபாய். 
* B 2 ரூபாய் Aக்கு கடனளித்துள்ளார்.எனவே அவரது மொத்த சொத்துமதிப்பு 2 ருபாய்.
* C 2 ஒரு ரூபாய் நாணயங்களை வைத்துள்ளார். என்வே நாட்டின் மொத்த் மதிப்பு 5 ரூபாய்.  
B அந்த நிலத்தை வாங்க நினைத்தார்.அவர் C யிடம் 2 ரூபாய் கடனாகப்பெற்றும் Aன் கடனைத்தள்ளுபடி செய்தும் நிலத்தை 4 ருபாய்க்கு வாங்கினார். இப்போது 
* A தனது கடன் அடைக்கப்பெற்று 2 ஒரு ரூபாய் நாணயாங்களையும் கொண்டுள்ளார்.எனவே அவரது சொத்து மதிப்பு 2 ரூபாய்.
* B 4 ரூபாய் மதிப்புள்ள நிலத்தையும் C யிடம் 2 ரூபாய் கடனும் கொண்டுள்ளார்.எனவே அவரது சொத்து மதிப்பு 2 ரூபாய்.
* C 2 ரூபாய் Bக்கு கடனளித்துள்ளார்.என்வே அவரது சொத்து மதிப்பு 2 ரூபாய். எனவே நாட்டின் மொத்த மதிப்பு 6 ரூபாய்.   இப்போது Cன் மனதில் ஒரு எண்ணம் பிறக்கின்றது. நிலத்தின் மதிப்பு உயர்வது நின்றுவிட்டால் B எப்படி கடனைத்திருப்பியளிப்பார். நாட்டில் உள்ளது 2 ஒரு ரூபாய் நாணயங்கள் தானே.என்வே நிலமும் ஒரு ரூபாய் தான் மதிப்புள்ளது என்று எண்ணினார். இதே எண்ணம் Aக்கும் தோன்றியது.யாரும் நிலத்தை வாங்க முன்வரவில்லை. எனவே முடிவில்,
* A 2 ஒரு ரூபாய் நாணயங்களைக்கொண்டுள்ளார்.எனவே அவரது சொத்து மதிப்பு 2 ருபாய்.
* B 2 ரூபாய் கடனை Cயிடம் இருந்து பெட்ருள்ளார்.அவர் தனது நிலத்தின் மதிப்பு 4 ரூபாய் என எண்ணிக்கொண்டு இருந்தார்.ஆனால் நிலத்தை வாஙும் மற்ற இருவரும் அதை 1 ருபாய்கு மதிப்பதால் அதன் மதிப்பு 1 ருபாய்.எனவெ அவரது சொத்து மதிப்பு 1 ருபாய். 
* c 2 ருபாயை Bக்கு கடனளித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 2 ரூபாய். இப்பொது நாட்டின் சொத்து மதிப்பு 3 ரூபாய்...அதாவது Bன் நிலமதிப்பு சரிந்ததால் நாட்டின் சொத்து மதிப்பும் சரிந்தது.  
B திவாலானதாக அறிவிப்பதை தவிர வேறு வழி இல்லை. எனவே C ஒரு ருபாய் மதிப்புள்ள நிலத்தை கைப்பற்றிக்கொள்கிறார்.B திவாலானதால் Cக்கு 2ரூபாய் கடனை திருப்பியளிக்க முடியவில்லை.எனவே Cக்கு 1 ரூபாய் நட்டம். முடிவில்,
* A வெற்றியாளர், B தோல்வியடைந்தவர், C நட்டமடைந்திருந்தலும் சிறிது அதிர்ஷ்டம் உள்ளவர். இதுதான் இப்போது உலக பொருளாதாரத்திலும் நடந்துள்ளது.இங்கு நிலத்திற்கு பதிலாக பங்குகள் விற்பனையில் எற்படும் மாற்றங்கள் மதிப்பை நிர்ணயிக்கின்றன.

தற்சமயம் பார்ப்போர்