தூங்கற குழந்தைய தட்டி எழுப்பினது மாறி பெருங்குரலெடுத்து அலறியது டைம் பீஸ் .கண் திறந்து மணியைப் பார்த்தேன் . அடக்கடவுளே ! மணி ஏழைக்காட்டியது.
அய்யகோ திவ்விய தரிசனம் காண நேரமாகிவிட்டதே!!! என அரக்கபரக்க எழுந்து பல்துலக்கி குளித்துமுடிக்கையில் மணி ஏழு இருபது. அறைக்கு வெளியே சென்று அம்மாவை அவசரப்படுத்தி காலை உணவை முடித்து வெளியே கிளம்பினேன். மணியை பார்த்தால் மணி ஏழு நாற்பது. மனது பரபரவென அடித்துக்கொண்டு வேகமாக ஓடி வண்டியை கிளப்பினேன்.சும்மாவா திவ்விய தரிசனம் ஆயிற்றே . இரண்டு வருடங்களாக தொடர்ந்து கண்டுகொண்டு இருக்கிறேன். வண்டி தெருவைக்கடந்து சிக்னலில் நின்று பிசைக்கரனின் "அய்யாசாமி " ஆட்டோ டிரைவரின் "சாவு கிராக்கி " எல்லாம் தாண்டி இதோ வந்து விட்டேன் . என் திவ்யாவின் தரிசனத்துக்காக!!!!!!!
ஹிஹி ஹிசும்மா ஒரு ஜாலிக்கு ட்ரை பண்ணேன்... ஹொவ் இஸ் இட் ???
No comments:
Post a Comment